மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய 451 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனையிட்டனர்.