துபாயில் இருந்து கடத்தி வந்த 451 கிராம் தங்கம் பறிமுதல்: தஞ்சை வாலிபர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய 451 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது தஞ்சாவூரை சேர்ந்த லியாகத் அலி (26) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 451 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.20 லட்சம். இதையடுத்து லியாகத் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: