சென்னை கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்!: குவியும் பாராட்டு May 10, 2021 கொரோனா திருவள்ளூர்: கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கண்ணியத்துடன் இறுதி மரியாதை அளித்து நல்லடக்கம் செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நெஞ்சை தொடும் இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அரங்கேறியுள்ளது. தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனாவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்குள்ள திருவேங்கடபுரம் மயானத்திற்கு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. எனினும் எந்த பெண்ணின் உடலை புதைக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் பாலாஜி, முன்னாள் வார்டு உறுப்பினர் பிரேம்குமார் மற்றும் ஜெயகிருஷ்ணன் என்ற சமூக ஆர்வலர் ஆகிய 4 பேரும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து அந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அவர்களது உறவினர்களும், ஊழியர்களும் புதைக்க முன்வராத நிலையில் ஊராட்சி மன்ற தலைவரே மயானத்திற்கு சென்று நல்லடக்கம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்