நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மதுரை சிறுவனுக்கு சைக்கிள் பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மதுரை :நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மதுரை சிறுவனுக்கு தமிழக முதல்வர் சைக்கிள் பரிசளித்தார். மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். மாநகராட்சி மின் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிஸ் வர்மன். இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவன் சைக்கிள் வாங்க சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

இதனை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அச்சிறுவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். மேலும் அச்சிறுவனுக்கு புதிய சைக்கிளை வாங்கி கொடுத்து வாழ்த்தினார்.முதல்வர் வழங்கிய சைக்கிளை, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி சிறுவனிடம் ஒப்படைத்தார். அப்போது பகுதி செயலாளர் பொன்வசந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் வைகை பரமன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,M.K.Stalin

@mkstalin

·

9h

ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை #COVID19 தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன்.

இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை!

சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: