சென்னை,: தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்படி கடந்த 7ம் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. மேலும் இது குறித்து டிவிட்டர் பக்கத்தில்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், நலமாக உள்ளேன். அருள்கூர்ந்து அலைபேசியில் அழைக்க வேண்டாம் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.