சென்னை,: தமிழகத்திற்கு நேற்று 7.46 லட்சம் டோஸ்கள் கோவாக்சின், கோவிஷீல்டு வந்ததையடுத்து இதுவரை 82,31,720 வந்துள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதன்பிறகு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 4ம் தேதி வரை கோவிஷீல்டு 62,03,590 டோஸ், கோவாக்சின் 11,57,139 டோஸ் வந்துள்ளது. இந்நிலையில் ஐதாரபாத்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 6ம் தேதி பார்சல்களில் 1 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசியும் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6ம் ேததி வரை 8.83 சதவீதம் தடுப்பூசி வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 493 தடுப்பூசிகள் இருப்பில் இருந்தது.