சென்னை: காலாண்டு சாலை வரி செலுத்துவதற்கு ஜூன் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்குமாறு தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போக்குவரத்துத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்கள் 160. 2000க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் கோவா முழுவதும் பயணிகளுக்கு சேவை வழங்குகிறோம். ஒரு பேருந்து ஐந்து நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மேலும் குறைந்தது 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் பேருந்தில் பணிபுரியும் ஒவ்வொரு நபரையும் சார்ந்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து இருக்கும் 5 லட்சம் நபர்களைப் பாதுகாக்கிறது.