செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாளை முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் நேற்றும் இன்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி வாகன நெரிசலில் ஸ்தம்பித்தது. செங்கல்பட்டு போலீசார், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.