சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். ஊரடங்கின் போது தேநீர் கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் சலூன் கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.