முகக்கவசம் அணியாதவர்களிடம் ஒரேநாளில் 43.97 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்ததாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு ெசய்து அபராதமாக போலீசார் 43.97 லட்சம் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.  அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக வடக்கு மண்டலத்தில் 4,074 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 3,011 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 4,206 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 6,739 பேர் மீதும், நகர் புறங்களில் 3,956 பேர் என மொத்தம் 21,986 பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு ெசய்துள்ளது. மேலும் அவர்களிடம் அபராதமாக 43 லட்சத்து 97 ஆயிரத்து 200 வசூலித்துள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது நேற்று முன்தினம் மட்டும் 550 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக 2 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: