ஏ.சி.சண்முகம் வாழ்த்து மக்கள் விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் 158 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனிப் பெரும்பான்மையுடன் தமிழக முதல்வராக  பொறுப்பேற்க உள்ளார். தமிழக மக்கள் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர். அவர் மக்கள் விரும்பும் முதல்வராக சிறப்பான ஆட்சியை தரவேண்டும் என்று அவருக்கு புதிய நீதிக்கட்சியின்  சார்பில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Related Stories: