சென்னை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஓரளவுக்கு கொரோனா தொற்று குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் நகை கடைகள், மால்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுகின்றனவா என மாநகராட்சியினர், வருவாய் துறையினர் கண்காணித்து அபராதம் விதித்து, சீல் வைத்து வருகின்றனர்.