ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவுக்கு வரவேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு கனடிய தமிழர் பேரவை கடிதம்

சென்னை: கனடிய தமிழர் பேரவை மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக பெற்ற மகாத்தான வெற்றியை பாராட்டுகிறோம். இன்றைய கோவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்திலே, தமிழ்நாட்டைத் தகுந்த முறையில் வழிநடத்திச் செல்லுவதற்கு செயற்திறன் மிக்க தலைமையை வழங்குவீர்கள் என்ற தமிழ் நாட்டு மக்களது நம்பிக்கையை, இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன.உலகெங்கும் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களை, குறிப்பாக ஈழத்தமிழர்கள் அந்த மண்ணில் எதிர்கொள்ளும் அநீதிகளையும், இன்னல்களையும் களைந்திடத் தங்களின் வலுவான தலைமையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். கனடியத் தமிழர் பேரவை தங்களோடு இணைந்து செயலாற்ற விரும்புவதோடு, தெற்காசியாவுக்கு அப்பால் கூடுதலான தொகையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் கனடாவுக்கு வருகை தர வேண்டும்.

Related Stories: