சென்னை: தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக கே.சண்முகம் 2019 ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். 2020 ஜூலையில் 60 வயது நிறைவடைந்ததையொட்டி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி அரசு அவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கியது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சண்முகம் தலைமை செயலாளராக நீடித்தார். பின்னர் கடந்த ஜனவரி இறுதியில் ராஜீவ் ரஞ்சன் தமிழகத்தின் தலைமை செயலாளராக பதவியேற்றார். ஆனாலும், சண்முகத்துக்கு ஓய்வு கொடுக்கப்படாமல், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.