திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 25 பேர் காயம்

திருப்புத்தூர், ஏப்.4: திருப்புத்தூர் அருகேயுள்ள குமாரப்பேட்டை கிராமத்தில் பூமலச்சி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 274 காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தொழுவில் இருந்து ஒவ்வொறு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 50 வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். முன்னதாக பல ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அலங்கரித்து மாலை, துண்டு கட்டி கொண்டுவந்து அப்பகுதிகளில் உள்ள கண்மாய் பகுதி, வயல்காட்டுப் பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்தனர். இதில் மாடு முட்டியதில் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் செண்பகம்பேட்டை ஆனந்த (35), புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி மணி(20) ஆகிய இருவரும் மேல் சிகிச்சைகாக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 25 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: