சென்னை வெற்றிநடை போடும் திமுக!: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!! May 02, 2021 ஸ்டாலின் சப்பாக்கம் தொகுதி சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகம் கண்டுள்ளார். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை பெற்றார். திருவல்லிக்கேணி தொகுதி நட்சத்திர வேட்பாளர் தொகுதியாக மாறி இருந்தது. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அங்கு போட்டியிட்டதே. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பல தொகுதிகளில் திமுக-வினரே வெற்றி முகம் கண்டு வருகின்றனர். இதனை கழக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி முகம் கண்டுள்ளார். இதுவரை உதயநிதி பெற்ற வாக்குகள் 65,595 ஆகும். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகள் 39,223 ஆகும். 48,384 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகள் பெற்றிருக்கிறார். இதேபோல் எக்மோர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். எக்மோரை பொறுத்தமட்டில் 25,124 வாக்குகள் வித்யாசம் உள்ளது.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்