5வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

கோவை: சேலம் ஜாஹீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் புகழ் ராஜா (37). இவர் கடந்த மாதம் 19ம் தேதி கொண்டலாம்பட்டியில் பைக்கில் சென்றபோது லாரி மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை புகழ் ராஜா 5வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

The post 5வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: