சென்னை சட்டமன்ற தேர்தல் 2021!: தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி..!! May 02, 2021 சட்டமன்றத் தேர்தல் 2021 தமிழ் கட்சி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் சதவீத அடிப்படையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. சிறிய தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு பிற்பகல் 3 மணியளவிலும் பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து, முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது. திமுக கூட்டணி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 8.58 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி 7.87 சதவீதம் வாக்குகளை பெற்று 2ம் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சி 1.15 சதவீதம் வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருக்கும் பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பெற்றிருக்கிறது. திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகிறார். நயினார் நாகேந்திரன் 22532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் 15,399 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு