தமிழகம் புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார்!: அதிமுக - திமுக இடையே கடும் வாக்குவாதம்..!! May 02, 2021 புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக - அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டும் அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டும் வருகின்றன. தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் அது அமையக்கூடும் என கருதப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. விராலிமலை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நம்பர் தவறுதலாக இருப்பதாக தெரிவித்து தற்போது வரை அங்கு முதல் சுற்றே எண்ணப்பட்டு முடியவில்லை. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது. மற்றொரு பகுதியில் தபால் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி செய்வதாக கூறி அதிமுக- திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு தான் அதிக வாக்கு கிடைத்திருப்பதாகவும் தபால் வாக்கில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாகவும் அதிமுக - திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது தேர்தல் அலுவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்
கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும்: ஹோட்டல் சங்கத்தினர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்