சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்தள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: லயோலா கல்லூரி நுங்கம்பாக்கம் வாக்கு என்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் லிபா நுழைவு வாயில் அருகே உள்ள மைதானத்திலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களை லயோலா கல்லூரி உட்புறமும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை காந்திசிலை அருகே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களை ராணிமேரி கல்லூரி உட்புறம் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.