சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது. ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்துக்காக எல்லா மக்களையும் அலைக்கழிக்க வேண்டாம். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். இது மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனை, புதுச்சேரியில் யாரும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசாங்கம் மூலமாக மருந்து வழங்கப்படுகிறது.