சென்னை: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஜோசப் பெலார்மின் அன்டன் சூரிஸ் (தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் துணை தலைமை வேதியியலாளர்) மற்றும் இரண்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.