ஸ்டாக் வந்தால் மட்டுமே 18+ வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் : தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

சென்னை : மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்த்த அளவு  கொரோனா தடுப்பூசி வந்தால் மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவதை தொடங்க முடியும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவர்களுக்கு  மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திட்டமிட்டபடி தொடங்க சாத்தியம் இல்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் இருந்து 1.5 கோடி தடுப்பூசிகளை அனுப்புமாறு கேட்டு இருப்பதாக ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். அதில் எந்த அளவு கிடைக்கும் எப்போது அனுப்பப்படும் என்ற தகவல் மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.மேலும் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என்றார். 

Related Stories: