சென்னை: தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர் ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெப்பம் அதிகரித்து வெப்ப சலனம் உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.