தமிழகத்தில் தினசரி அதிகரிப்பு கொரோனா தொற்று 18,000ஐ நெருங்கியது

சென்னை: மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,40,589 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17,897 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று சென்னையில் மட்டும் 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,12,556 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11,48,064 ஆக உயர்ந்துள்ளது. 15,542 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 107 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 13,933 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 40 பேர் நேற்று உயிரிழந்தனர்.

நேற்றைய மொத்த பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 5,445பேர், செங்கல்பட்டு 1,164 கோவை 1,008 கடலூர் 249 தருமபுரி 154, திண்டுக்கல் 245, ஈரோடு 473, கள்ளக்குறிச்சி 214, காஞ்சிபுரம் 352, கன்னியாகுமரி 211, கரூர் 137, கிருஷ்ணகிரி 371, மதுரை 604, நாகப்பட்டினம் 265, நாமக்கல் 298, நீலகிரி 49, பெரம்பலூர் 30, அரியலூர் 44, புதுக்கோட்டை 102, ராணிப்பேட்டை 334, சேலம் 513, தென்காசி 229, தஞ்சாவூர் 315, சிவகங்கை 106, தேனி 281, திருப்பத்தூர் 176, திருவள்ளூர் 792, திருவண்ணாமலை 225, திருவாரூர் 175, தூத்துக்குடி 576, நெல்லை 849, திருப்பூர் 366, திருச்சி 404, ராமநாதபுரம் 205 வேலூர் 351, விழுப்புரம் 359, விருதுநகர் 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று மட்டும் 17,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: