கரூர் மகாத்மா காந்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பாதாள சாக்கடை மேன்ஹோல்-புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

*இது உங்க ஏரியா

கரூர் : கரூர் மகாத்மா காந்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோலை புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருர் நகராட்சிக்குட்பட்ட மகாத்மா காந்தி சாலையை சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள அதிகளவு உள்ளன.

இதன் காரணமாக இந்த சாலை அதிக வாகன போக்குவரத்து நடைபெறும் பகுதியாக உள்ளன.இந்நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்துள்ள காரணத்தினால் இதனை சுற்றிலும் கற்கள் வைக்கப்பட்டுள்ளன, இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, மூடியை புதிதாக வைத்து, வாகனங்கள் எளிதாக சாலையில் செல்ல தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: