7 பேருக்கு கொரோனா தொற்று பள்ளிபாளையம் நகராட்சியில் 2 வீதிகளுக்கு தகர தடுப்பு

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் நகராட்சியில் இதுவரை 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேரு நகரில் ஒரே வீட்டில் இருந்த 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது போலவே ஆஸ்பத்திரி வீதியில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நேரு நகர், ஆஸ்பத்திரி வீதி ஆகிய இரண்டு இடங்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், புதியவர்கள் உள்ளே வரவும் தடை விதிaக்கப்பட்டு, நகராட்சி ஊழியர்கள் நேற்று தகர தடுப்புகளை அடித்துள்ளனர்.

Related Stories: