சென்னை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த குழுவின் அறிக்கையை, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் நேற்று வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையினர் அல்லாத மாணவர் சேர்க்கைகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையில் மாணவர் சேர்க்கை குழுவை தமிழக அரசு நியமித்தது.