சென்னை லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப் பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை!: ஐகோர்ட்டில் இயக்குநர் ஷங்கர் பதில்..!! Apr 28, 2021 லைகா ஷங்கர் ஐகோர்டே சென்னை: இந்தியன் -2 படம் தொடர்பாக லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் சங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கிறது. லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப் பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்திருக்கிறார். இரு தரப்பும் பேச்சு நடத்தி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை என்று ஷங்கர் விளக்கமளித்திருக்கிறார். தங்கள் நிறுவனத்திற்கு இந்தியன் 2 படத்தை தயாரித்து கொடுக்காமல் பிற படங்களை தயாரிப்பதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில், ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தனக்கு தேதிகள் வெற்றிடமாக இருப்பதாகவும் அந்த காலகட்டத்தில் முடித்து கொடுப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் சமரசமாக பேச்சு நடத்தி தீர்வுகாண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இருதரப்புக்கும் இடையே இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுக்கு பிறகும் எந்த தீர்வும் எட்டப்படாததால் லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப் பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை. இதனால் லைகா நிறுவனத்துடனான பிரச்சனைக்கு நீதிமன்றமே தீர்வு காண வேண்டும் என்று ஷங்கர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்