ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக புரளியை கிளப்புவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என சில நாட்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக டாக்டர்கள் கூறி வருவதாக நேற்று அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோன்ற பொய் தகவலை பரப்பும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நேற்று எச்சரிக்கை விடுத்தார். யோகி அடுத்தடுத்து விடுக்கும் இந்த எச்சரிக்கைகள், உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.