சென்னை கொரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைவு!: 12 ரயில் சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! Apr 27, 2021 கொரோனா தெற்கு ரயில்வே சென்னை: கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்தாகி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை உயர்த்து வருவதால் போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டு வருகிறது. மக்களை நடமாட்டத்தை கட்டுப்படுத்த இவ்வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்தாகி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதன்படி ராமேஸ்வரம், குமரி வாராந்திர சிறப்பு ரயில்கள் சனி, திங்கள், புதன் நாட்களில் மே 1 முதல் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. குமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு