சென்னை '55 வயதுக்கு மேற்பட்டவர்களை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியமர்த்தக்கூடாது': தமிழக அரசு உத்தரவு..!! Apr 27, 2021 தமிழக அரசு உத்தரவு சென்னை: 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களை 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களை 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியமர்த்த கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த அளவு நபர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கைகளை கழுவுவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேலையாட்கள் கொண்டு வரும் உணவு பொருள், தண்ணீரை பரிமாற கூடாது என கூறியிருக்கும் தமிழக அரசு, 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்