கொள்ளிடம் அருகே வீட்டின் பின்புறம் வைத்த வலையில் சிக்கிய பாம்பு-வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளில் கொல்லைப்புற வழியாக பாம்புகள் வீட்டிற்குள் புகாதவாறு வீடுகளின் பின்புறத்தை சுற்றி வலை வைத்திருந்தனர்.இந்நிலையில் நேற்று காலை ஒரு நல்ல பாம்பு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு ஊர்ந்து வந்தபோது வலையில் சிக்கிக் கொண்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், வனத்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சீர்காழி வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வலையில் சிக்கிய நல்ல பாம்பை சாதுரியமாகவும்,பாதுகாப்பாகவும் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு எடுத்துச் சென்றனர்.

Related Stories: