சென்னை: சென்னையில் இருந்து செல்லும் அந்தமான் உள்ளிட்ட 6 உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் நேற்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இதுவரை வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளி மாநில பயணிகளுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை. ஆனால் நேற்று முதல் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையம் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ள பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.