சென்னை ஆக்சிஜன் உற்பத்தி தேவை!: நெருடல், உறுத்தலோடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடன்படுகிறோம்..வி.சி.க. தலைவர் திருமாவளவன்..!! Apr 26, 2021 திருமாவளவன் சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது என்ற அனைத்து கட்சி கூட்ட முடிவுக்கு நெருடல்கள் இருந்தாலும் உடன்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனினும் மாவட்டங்கள் தோறும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்று அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சியினரும் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். அதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வேறு எதற்கும் மின்சார இணைப்பு கொடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகின்ற கூட்டமாக இன்று ஒரு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர். இவை நெருடலை தருகிறது. பெரும் உறுத்தலை தருகிறது. இருப்பினும் ஆக்சிஜன் உற்பத்தி தேவை என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இத்தகைய முடிவு எடுத்துள்ளதால் நெருடல்களோடு, உறுத்தல்களோடு ஆலையை திறக்க உடன்படுகிறோம். ஆனாலும் மீண்டும் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மட்டுமே இதற்கு தீர்வு ஆகாது. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே ஒட்டுமொத்த தேவைகளை பூர்த்தி செய்துவிடாது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு