சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள இடக்குடி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான தங்கமணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ., பவுன்ராஜும், கும்பகோணம் டி.எஸ்.பியான அவரது மகன் பாலகிருஷ்ணனும் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பாக எனது வீட்டுக்கு வந்து, 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்கும்படி கூறினர். அதற்கு மறுத்ததால் என் மீது பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டினர்.