டெல்லி : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர் பங்கேற்கினறனர்.அப்போது, தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.