சென்னை : தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதா ? மேலும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று விவாதிக்கப்படுகிறது.