ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் அரிச்சல்முனை தனுஷ்கோடி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் புதுரோடு சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து சுற்றுலா வாகனங்கள் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.