ரயில் சேவையில் மாற்றம்

சென்னை:  சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில்,  சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு  பணி  நடைபெற உள்ளதால்,  புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.15 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டை- எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.35 மற்றும் 3.30 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10 மற்றும் 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டை- எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

Related Stories: