சென்னை: மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு 17 வயது சிறுமி புல்லாங்குழல் பயிற்சி வகுப்புக்கு சென்றபோது, புல்லாங்குழல் பயிற்சி ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இதை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள், இதுகுறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டப்பிரிவு உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மயிலாப்பூர் மார்வாடி தோட்டம் ேகாரோனட் காஸ்டல் பகுதியை சேர்ந்த ராமானுஜம் (59) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.