சென்னை: மாமல்லபுரம் அருகே 3 அடி உயரத்தில் தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி மரச்சிற்பம், அயோத்தி ராமர் கோயிலுக்கு லாரி மூலம் எடுத்து செல்லப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் 340 தூண்களுடன் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இக்கோயிலில் வைப்பதற்காக தேக்கு மரத்திலான மாதிரி சிற்பம் செதுக்க மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியில் உள்ள மானசா மரச்சிற்பக்கலை கூடத்தில் ராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் பரிந்துரைத்துனர். பின்னர் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்ப கலைஞர் ரமேஷ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட மரச்சிற்ப கலைஞர்கள் கடந்த 6 மாதங்களாக தேக்கு மரத்தில் 3 அடி உயரத்தில் 3 அடுக்குகளுடன் 340 தூண்களுடன் தேக்கு மரத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி மரச்சிற்பத்தை ராமர் கருவறையுடன் செதுக்கி உள்ளனர்.