சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறும் ஊழல்கள் குறித்து திமுக தொடர்ந்து ஆளுநர், டிஜிபி ஆகியோரிடம் புகார் கொடுத்து வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் ேததி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்களை கொடுத்தார். கிராம ஊராட்சிகளுக்கு எல்இடி விளக்கு வாங்கியதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழல், தரமற்ற நிலக்கரி வாங்கியும் போலி மின்கணக்கில் அமைச்சர் தங்கமணி ஊழல், அரசு அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் நியமனம் செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல், பாரத் நெட் டெண்டரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஊழல், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் அமைச்சர் ஜெயக்குமார் செய்த ஊழல் என பட்டியலிடப்பட்டிருந்தது.இதேபோல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக தொடர்ந்து பல ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதுடன் நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை டிஜிபியிடம் புகாரும் கொடுத்துள்ளது. அந்த புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.