பேராம்பூர் பெரிய ஏரியில் உடைந்த ஷட்டர்கள் சீரமைக்கப்படுமா?..பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாட்டம் பேராம்பூர் ஏரி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் மழை காலங்களில் தண்ணீர் பெருகினால் கடல்போல் காட்சியளிக்கும். இந்த ஏரியை நம்பி சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒருமுறை தண்ணீர் நிரம்பிவிட்டால் அந்த ஆண்டின் மூன்று போகம் விளைச்சலுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் மீன்பிடி தொழிலும் களைகட்டும். இந்த ஏரிக்கு பல காட்டாறுகள் மற்றும் கட்டகுடி, திருநல்லூர், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவாட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறும்போது அனைத்து தண்ணீரும் பேரம்பூர் ஏரியை வந்தடையும். இதனை பொதுப்பணி அதிகாரிகள் கண்காணிக்க தொடங்குவார்கள்.

ஏரி நிரம்பியபிறகும் மழை பொழிவு இருந்தால் ஏரிக்கு மேற்கு பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறந்து வெளியேறும் பணியை பொதுப்பணி துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கண்காணிப்பார்கள். இதனால் எப்போது பேராம்பூர் ஏரியின் மூன்று ஆறுகண் ஷட்டர்களை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் மராமத்து பணிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழைபெய்யாததால் ஏரி நிரம்பவில்லை. இதனால் அந்த ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறுவது நின்று விட்டது. மேலும் அதிகாரிகள் அந்த ஷட்டரை பராமரிப்பு செய்யவும் இல்லை.

இதனால் ஷட்டரின் உட்பகுதியில் அனைத்து சிமென்ட் பூச்சுகளும் பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளது. இரும்பு ஷட்டர்கள் அனைத்தும் துருப்பிடித்து கொட்டுகிறது. அரளை கல் கட்டிடங்கள் மட்டும் தொடுக்கிக்கொண்டு இருந்து வருகிறது. எப்பொழுது மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் திருச்சி முக்கொம்பில், மதகுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதுபோல் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. வௌத்தால் பேராம்பூர் பாலம் அடித்து செல்லப்பட்டால் அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ஏரிகளில் பேராம்பூர் ஏரி உள்ளது. நல்ல மழை பெய்து தண்ணீர் பெருகினால் விவசாயிகள் தண்ணீர் பிரச்னையின்றி ஒரு ஆண்டு முழுவதும் நேரடி பாசனத்தின் மூலம் பயனடைவார்கள்.

இதனால் விவசாயிகள் அதிக மகசூல் அடைந்தனர். அதிகளவு தண்ணீர் பெருகினாலும் ஏரியின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஆரு கண் மதகுகள் வழியாக திறந்துவிடுவார்கள். இதனை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீர் குறைந்தவுடன் மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தில் தண்ணீரும் பெருகவில்லை. மதகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவும் இல்லை. இதனால் தற்போது மதகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனை அதிகரிகள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து தகுந்த நடவடிக்கைய மேற்கொண்டு உடைந்து கிடக்கும் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: