கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டிஸ்சார்ஜ்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகனுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படும் வகையில் அவரது உடல்நிலை இல்லை. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், துரைமுருகனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Related Stories: