புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் குட்கா பொருட்களை குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தட்சணாமூர்த்தி மார்க்கெட் அருகே அப்துல் சலாம் என்பவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது போஸ் நகரை சேர்ந்த தாஜுதன் என்பவர் குட்கா பொருட்களை வாங்க வந்துள்ளார்.