சென்னை : சென்னையில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களில் 55% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 20 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் அதில் 9 லட்சத்து 1 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இன்னும் 55% கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்ற தஃவலி மாநகராட்சி வெளியிட்டுள்ளது.