சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து புதிய துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்ணா பல்கலை துணை வேந்தராக 2018ல் சூரப்பா நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், பாஜ ஆதரவாளர் என்று எதிர்ப்பு கிளம்பியது. இவர் துணைவேந்தர் ஆனதில் இருந்து அண்ணா பல்கலைக் கழகத்தில் பல பிரச்னைகள் எழுந்தன. அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வந்த பொறியியல் கவுன்சலிங்கை நடத்த மாட்டேன் என்று சூரப்பா பகிரங்கமாக அறிவித்தார். அதன் மூலம் மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் மூண்டது.