நாங்குநேரி: நாங்குநேரி பகுதியில் கொட்டப்படும் கான்கிரீட் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரட்டை ரயில்பாதை பணிகள் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளுக்காக தனியார் நிறுவனங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் ரெடிமேட் கான்கிரீட் கலவைகள் வாங்கப்படுகின்றன. தேவையான இடத்தில் காங்கிரீட் கலவைகளை கொண்டு சேர்த்த பின் மீதமுள்ள தேவையற்ற கான்கிரீட் கழிவுகளை தனியார் நிறுவன ஊழியர்கள், வயல்வெளிகள், தரிசு நிலங்கள், நெடுஞ்சாலை ஓரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிச் செல்கின்றனர்.