தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஒரத்தநாடு பேருந்து நிலையம் சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட பழமைவாய்ந்த பேருந்து நிலையம். ஒரத்தநாட்டை சுற்றியுள்ள சுமார் 98 பஞ்சாயத்துகளுக்கு இங்கு இருந்துதான் பேருந்துகள் செல்கின்றன. மேலும் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கறம்பக்குடி, மன்னார்குடி, திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் நீரால் சூழ்ந்தது.