சாம்ராஜ்நகர்: கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா டவுன் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரகுப்தா. இவர் இதே பகுதியில் நான்கு கடைகளை கட்டி அவைகளை வாடகைக்கு விட்டு வந்தார். இவரது கடையில் தேவாங்கபேட்டை வீரண்ணா தெருவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் வாடகை இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடைக்கு சென்ற உரிமையாளர் நாகேந்திரகுப்தா கடையின் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மஞ்சுநாத்திடம் தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த இவர் உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.